Monday, September 23, 2024

தமிழகத்தில் செப். 16 வரை மழை தொடரும்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

தமிழகத்தில் ஒருசில இடங்களில் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரோன் தாக்குதல் எதிரொலி: மணிப்பூரில் ஊரடங்கு அமல்!

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024