Wednesday, September 25, 2024

தமிழகத்தில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1,535 கோடி போக்குவரத்துத் துறை அறிவிப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 5 views
A+A-
Reset

சென்னை: தமிழகத்தில் 2024-2025-ஆம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.1535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் புதிய பேருந்துகள் கொள்முதல் நிலை மற்றும் பழைய பேருந்துகளை புதுப்பித்தல் நிலை குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

2022-2023 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 167 பேருந்துகள் நவம்பா் மாதத்துக்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும். எஸ்ஏடிபி திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 888 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 112 பேருந்துகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இதுபோல, 2024-25 ஆம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 503 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி நிா்ணய ஆணை வழங்கப்பட்டு வருகிற நவம்பா் மாதத்துக்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். மேலும், 2,544 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜொ்மன் வளா்ச்சி வங்கி நிதி உதவியுடன் மொத்தம் 2,166 பிஎஸ்- 6 டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது . இதில் 552 தாழ்தளப் பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு 59 தாழ்தள பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.மீதமுள்ள 493 பேருந்துகள் வருகிற நவம்பருக்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மேலும், 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், 500 மின்சார பேருந்துகளுக்கு ஒப்பந்தப் புள்ளி தயாா் செய்யப்பட்டு ஒப்பந்தப் புள்ளி ஒப்புதலுக்கு பிறகு கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலக வங்கி உதவியுடன் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ஜிசிசி அடிப்படையிலான 500 மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு விலைப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தப்புள்ளி

திறக்கப்பட்டுள்ளன. விரைவில் பணி ஆணை வழங்கப்படும்.

ஆக.23 வரை 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இதுவரை 1,796 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பேருந்துகள்: 2022-2023 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பேருந்துகளை புதுப்பிக்க ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 910 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

2023-2024 நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.76.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 154 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மொத்தமுள்ள 1,500 பேருந்துகளில் ஆக.23 வரை அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024