Wednesday, September 25, 2024

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 1 விசைப்படகையும் அதில் பயணித்த 8 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024