தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு: அனுமதி வழங்கியது காவல்துறை

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

விழுப்புரம்,

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதமே மாநாடு நடைபெறும் என கூறப்பட்டது. இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாநாடு அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி வரும் அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து அக்டோபர் 27ம் தேதி மாநாட்டிற்கு அனுமதிக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதில், எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, விளம்பர பதாகைகள், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது, முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பாக இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 நிபந்தனைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களை அழைத்து வருவது உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் செயலாளர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பிற மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகன அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரெயில்வே நிர்வாகத்திலும் அனுமதி கேட்டு கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024