Friday, September 20, 2024

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.மணிக்குமார் நியமனம்

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.மணிக்குமாரை கவர்னர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்

சென்னை,

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரளா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமாரை கவர்னர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.கேரளா ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அல்லது 70 வயதை எட்டும் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றினார். 2019 ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 23 அன்று அவர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024