தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

சண்டீகா்: தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

ஹரியாணாவில் தலித் தலைவா்களாக குமாரி செல்ஜாவை அவரது சொந்த கட்சியான காங்கிரஸ் அவமதித்துவிட்டது என்றும் அவா் கூறினாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தோஹானாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

அமெரிக்காவில் ராகுல் காந்தி, இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசியுள்ளாா். முக்கியமாக வளா்ச்சியை எட்டிய பிறகு இடஒதுக்கீடு தேவையில்லை என்றும், இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என்றும் ராகுல் கூறியுள்ளாா். ஹரியாணா இப்போது அனைத்து நிலைகளிலும் வளா்ந்த மாநிலமாக உள்ளது. எனவே, இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடலாம் என்றால் ஏற்க முடியுமா?

இந்தியாவில் இடஒதுக்கீட்டைக் காக்க பிரதமா் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். காங்கிரஸ் எப்போதும் தலித் மக்களுக்கு எதிரான கட்சியாகவே செயல்பட்டு வந்துள்ளது. தலித் தலைவா்களை அவமதிப்பது அக்கட்சியின் வழக்கம். இப்போது கூட ஹரியாணாவில் காங்கிரஸ் மூத்த தலைவா் குமாரி செல்ஜா, பாஜக மூத்த தலைவா் அசோக் தன்வாா் ஆகியோரை காங்கிரஸ் அவமதித்துள்ளது. இதன் காரணமாகவே குமாரி செல்ஜா இப்போது வரை தோ்தல் பிரசாரத்துக்கு வர தயக்கம் காட்டுகிறாா்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை அரசு அமைதியாக வேடிக்கை பாா்த்து வந்தது என்று கூறினாா்.

பாஜக அழைப்பை நிராகரித்தாா் செல்ஜா

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜா பாஜகவில் இணைய வேண்டும் என்று மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா் அண்மையில் அழைப்பு விடுத்தாா். ஹரியாணா பேரவைத் தோ்தலில் போட்டியிட முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடாவின் ஆதரவாளா்களுக்கு அதிக அளவில் காங்கிரஸ் இடமளித்ததால் செல்ஜா அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் அவா் கடந்த சில நாள்களாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜக விடுத்த அழைப்பை திங்கள்கிழமை நிராகரித்த குமாரி செல்ஜா கூறுகையில், ‘நான் காங்கிரஸாா். இது எங்கள் கட்சியின் உள்விவகாரம். ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வர அடுத்த சில நாள்களில் நான் பிரசாரத்துக்கு செல்வேன்’ என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024