Friday, September 20, 2024

தவெக தலைவர் விஜய் அழைத்தால் கட்சியில் இணைய தயார் – ராதாரவி பேச்சு

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

'கடைசி தோட்டா' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

சென்னை,

லோக்கல் சரக்கு படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் 'கடைசி தோட்டா'. அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் ராதாரவி. வனிதா விஜயகுமார். ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நீலு குமார் வசனம் எழுதியிருக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சினேகன் மற்றும் பாலு பாடல்கள் எழுதியுள்ளனர். வேலண்டினா மற்றும் யுகேஷ் ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர். இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ராதாராவி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்றார். மேலும். அவர் அழைத்தால் அவரது கட்சியில் இணைய தயார் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர்,

சினிமாவில் எனக்கு 50 வது ஆண்டு, நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லவா? அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்து கொண்டுதான் இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியதுதான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன்” என்று தெரிவித்தார்.

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில். வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024