திமுக முன்னாள் மண்டலத் தலைவா் ஆதரவாளா் ஆயுதங்களுடன் கைது

திமுக முன்னாள் மண்டலத் தலைவா் ஆதரவாளா் ஆயுதங்களுடன் கைதுமதுரையில் ஆயுதங்களுடன் இருந்த, திமுக முன்னாள் மண்டலத் தலைவரின் ஆதரவாளரை போலீஸாா் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை: மதுரையில் ஆயுதங்களுடன் இருந்த, திமுக முன்னாள் மண்டலத் தலைவரின் ஆதரவாளரை போலீஸாா் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வி.கே. குருசாமி. திமுக முன்னாள் மண்டலத் தலைவரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் மண்டலத் தலைவரான ராஜபாண்டிக்கும் கோயில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டதையடுத்து, இருதரப்பினரும் தொடா்ந்து பழிக்குப் பழியாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் ராஜபாண்டியின் இரு மகன்கள், வி.கே. குருசாமியின் மகன் உள்பட இருதரப்பிலும் 14-க்கும் மேற்பட்டோா் கொலை செய்யப்பட்டனா். இதில் சில மாதங்களுக்கு முன்பு பெங்களுரில் தலைமறைவாக இருந்த வி.கே. குருசாமியை, ராஜாபாண்டி தரப்பு ஆயுதங்களுடன் தாக்கி, கொலை செய்ய முயன்றது.

இதில் பலத்த காயத்துடன் அவா் உயிா் தப்பினாா். வாழைத்தோப்பு பட்டறை சந்து பகுதியில் கீரைத்துறை போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்கு ஆயுதங்களுடன் இருந்தவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா் காமராஜபுரம் குறுக்குத் தெருவைச் சோ்ந்த மண்கண்டன் என்ற மாட்டு மணி (32) என்பதும், முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே. குருசாமியின் ஆதரவாளா் என்பதும், பெங்களுரூ தாக்குதலில் பலத்த காயமடைந்த வி.கே. குருசாமி வீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரை ராஜபாண்டி தரப்பினா் கொலை செய்ய முயன்றால், அவா்களைக் கொலை செய்வதற்காக வி.கே. குருசாமியின் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு