திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

எஸ்கே23 படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு எஸ்கே23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், சிவகார்த்திகேயனின் 24-வது படம் குறித்த தகவல் வெளியானது. அதன்படி, இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதில், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த படத்திற்கு 'பாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

"யப்பா.. நல்லாருக்கியா.." கோவில் கூட்டத்திலும் ரசிகரை கண்டுபிடித்த நடிகர் சிவகார்த்திகேயன்#sivakarthikeyan#tiruchendurpic.twitter.com/lXoWBTDz0E

— Thanthi TV (@ThanthiTV) July 15, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024