திருடச் சென்ற வீட்டில் திருடன் செய்த வினோத செயல்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

திருடச் சென்ற வீட்டில் திருடன் செய்த வினோத செயல்… வைரலாகும் சிசிடிவி பதிவு… என்ன நடந்தது?திருடச் சென்ற வீட்டில் திருடன் செய்த வினோத செயல்... வைரலாகும் சிசிடிவி பதிவு... என்ன நடந்தது?

திருட வந்த வீட்டில் 20 ரூபாயை திருடன் வைத்துவிட்டுச் சென்ற சுவாரஸ்யம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததால் திருட ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது முகத்தை மறைத்தபடி வீட்டுக்குள் திருட சென்றவர், வீடு முழுவதும் ஏதேனும் சிக்குமா என தேடியுள்ளார். மேலும் வீடு முழுவதும் தேடிப் பார்த்தபோதும் பணம் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் ஆதங்கமடந்த திருடன் தனது ஆதங்கத்தை அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகும் வகையில் வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

இந்நிலையில், இறுதியில் வீட்டின் ஃபிரிட்ஜில் இருந்த பாட்டிலில் தண்ணீரை எடுத்துக் குடித்துள்ளார். பின்னர் குடித்த தண்ணீருக்கான காசு 20 ரூபாயை டேபிளில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்தக் காட்சி பலரையும் கவர்ந்துள்ளதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Crime News
,
Telangana

You may also like

© RajTamil Network – 2024