Tuesday, September 24, 2024

திருத்தணியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 1 வயது ஆண் குழந்தை பலி

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

திருத்தணி முருகப்பா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி முருகப்பா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். இதில் பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா, குழந்தைகள் மிதுலன், நபிலன் ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த நான்கு பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1 வயது ஆண் குழந்தை நபிலன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் பிரேம்குமார், மனைவி மஞ்சுளா, குழந்தை மிதுலன் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தீ விபத்தில் குழந்தை நபிலன் இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தில் குடியிருப்பின் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வானங்கள் எரிந்து நாசமானது.

You may also like

© RajTamil Network – 2024