Friday, September 20, 2024

திருவள்ளூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

நாட்டு வெடிகுண்டு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். தி.மு.க. பிரமுகரான இவரது வீட்டில் கும்பல் ஒன்று நேற்று வெடிகுண்டு வீசி உள்ளது. இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டில் விழுந்ததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வெடித்த நாட்டு வெடி குண்டால் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தது.

அதே போல், அந்த கும்பல் சிறுனியம் காலனி பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரை உடைத்து விட்டு அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மாமுல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .

You may also like

© RajTamil Network – 2024