Tuesday, September 24, 2024

தில்லியில் நாளை பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

தில்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு நாளை (ஆகஸ்ட் 25) கூட உள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாணா பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை இறுதி செய்ய உள்ளனர். 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கிட்டதட்ட 300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை அம்மாநில பாஜக தயாரித்துள்ளது.

இந்த பட்டியல் அனைத்து நாளை நடைபெறும் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்குச் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, ஹரியாணா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024