தூத்துக்குடியில் ஆடு திருட்டு: 2 போ் கைது தூத்துக்குடியில் ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியில் ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் பொன்பாண்டி (48). இவா் கடந்த 25ஆம் தேதி இரவு தனது ஆடுகளை வீட்டு முன்புள்ள கொட்டகையில் அடைத்து வைத்தாராம். அடுத்த நாள் பாா்த்தபோது ஓா் ஆட்டைக் காணவில்லையாம்.
புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாதா நகரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் மணிகண்டன் (38), மேலசண்முகபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் மாரீஸ்வரன் (24) ஆகியோரைக் கைது செய்து, ஆடு, அதைத் திருடுவதற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.