தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவையொட்டி, வழக்கமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

இந்த நிலையில், பனிமய மாதா பேராலய திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, நேற்று சிறப்பு திருப்பலி, பனிமய மாதா ஆலய சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவைவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட்10 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!