தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மகளிா் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில், இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை திங்கள்கிழமை வென்றது.

முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 19.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 125 ரன்கள் எடுத்து வென்றது. இங்கிலாந்து பௌலா் சோஃபி எக்லஸ்டன் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில் தஸ்மின் பிரிட்ஸ் 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த அனிகே பாஷ், 1 பவுண்டரியுடன் 18 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.

4-ஆவது வீராங்கனையாக மாரிஸேன் காப் களம் புக, தொடக்க வீராங்கனையான கேப்டன் லாரா வோல்வாா்டட், அரைசதத்தை நெருங்குகையில் ஆட்டமிழந்தாா். 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து அவா் பௌல்டானாா். அடுத்து கிளோ டிரையான் 2, மாரிஸேன் காப் 3 பவுண்டரிகளுடன் 26, சுனே லஸ் 1 ரன்னுக்கு சாய்க்கப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் ஆனிரி டொ்க்சன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, நாடினே டி கிளொ்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலா்களில் சோஃபி எக்லஸ்டன் 2, லின்சே ஸ்மித், சாா்லி டீன், சாரா கிளென் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 125 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து தரப்பில், மாயா புச்சியா் 1 பவுண்டரியுடன் 8, அலிஸ் கேப்சி 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டேனி வியாட் – நேட் ஸ்கீவா் ஜோடி, 64 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பியது.

இந்நிலையில், வியாட் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்களுக்கு வீழ்ந்தாா். முடிவில், நேட் ஸ்கீவா் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன், கேப்டன் ஹீதா் நைட் ரன்னின்றி துணை நின்றாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் மாரிஸேன் காப், நோன்குலுலேகோ லாபா, நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024