Friday, September 20, 2024

தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் தேர்வானார் ரமபோசா

by rajtamil
0 comment 28 views
A+A-
Reset

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 400 தொகுதிகளில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார். இதன்படி சிறில் ரமபோசா தென் ஆப்பிரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024