ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சிறையிலிருந்தபோது பாஜகவால் நிறுத்தப்பட்ட சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆம் ஆத்மி அரசு மீண்டும் தொடங்கும் என்று தில்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி கூறியது..
அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தன அரசு பழுதடைந்த சாலைகளை சீரமைக்கத் தொடங்கும் என்று தெரிவித்தார்.
சேதடைந்த சாலைகள் பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்த பணிகளுக்காக ஏற்கனவே 74 டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர் ஆய்வு செய்ததில் மொத்தம் 6,671 பள்ளங்கள் உள்ள சாலைகளை அடையாளம் காணப்பட்டதாகவும், 3,454 சாலைகள் இதுவரை சீர்ப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்
செய்தியாளர் சந்திப்பில் கேஜரிவால் கூறியது,,
நான் சிறையில் இருந்தபோது, பாஜக தில்லி அரசின் பல்வேறு பணிகளை முடக்கினர்.
நான் திரும்பிய பிறகு, நானும் அதிஷியும் சாலைகளை ஆய்வு செய்தோம், சாலைகளின் நிலை மிகவும் பழுதடைந்துள்ளது தெரியவந்தது. சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் அதிஷிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
சீரமைப்புப் பணிகள் குறித்த விவரங்களை அளித்த அதிஷி, சேதமடைந்த 89 முக்கிய சாலைகளை முதல்கட்டமாக சீரமைக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.