9
தேர்தல் வெற்றி: கருப்பணசாமிக்கு 20 அடி நீள அரிவாளை நேர்த்திக் கடனாகச் செலுத்திய கார்த்தி சிதம்பரம் எம்.பி
திருப்புவனம்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து கார்த்தி சிதம்பரம் எம்.பி மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி நீள அரிவாளை இன்று நேர்த்திக்கடனாக செலுத்தினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாட்டில் பிரசித்தி பெற்ற கருப்பண சுவாமி கோயில் உள்ளது. மக்களவைத் தேர்தல் சமயத்தில், தேர்தலில் வெற்றி பெற்றால் மாரநாடு கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக அரிவாள் அடித்துப் போடுவதாக கார்த்தி சிதம்பரம் வேண்டுதல் வைத்திருந்தார். அதன்படி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
இதையடுத்து இன்று (ஆக.16) மாரநாடு கருப்பணசாமி கோயில் 20 அடி நீள அரிவாளை கார்த்தி சிதம்பரம் நேர்த்திக் கடனாகச் செலுத்தினார்.