2
சென்னை துரைப்பாக்கம் அருகே நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகளை திருடியதாக, வீட்டு வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டாா்.
சென்னை காரப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் நடிகா் கருணாகரன். இவரது வீட்டு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து நடிகா் கருணாகரனின் மனைவி கண்ணகிநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், வீட்டில் வேலை செய்யும் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயா (44) என்பவா்
நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டாா். அவரை போலீஸாா் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனா்.