0
நடிகை சித்ராவின் கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
சென்னை: சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில், விசாரணை நீதிமன்றம் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே ஹேம்நாத்தை விடுதலை செய்துதிருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், என கோரியுள்ளார்.