நாகாக்க… பாஜக எம்.பி கங்கனாவுக்கு கட்சி மேலிடம் அட்வைஸ்
கங்கனா ரணாவத்
விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று நடிகை கங்கனா ரனாவத்துக்கு பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் விவசாயிகள் பிரச்சனைகள் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
Also Read :
பாஜகவில் இணையும் சம்பாய் சோரன்… சட்டப்பேரவை தேர்தலால் அதிரும் ஜார்க்கண்ட் அரசியல்
இந்நிலையில், அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகையும் இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி தொகுதி எம்.பி.,-யுமான கங்கனா ரனாவத் விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி கருத்து கூறினார். அதில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது மோடி அரசு வலுவான நடவடிக்கை எடுத்ததாகவும்
விளம்பரம்
அவ்வாறு எடுக்காவிட்டால் தற்போது வங்கதேசத்தில் நடப்பதைப் போல நிலைமை மாறியிருக்கும் என்றும் 3 சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் விவசாயிகள் போராட்டம் நடத்துவது வெளிநாட்டினர் சதி என்றும் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சுக்கு பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஹர்ஜித் கரேவால் கண்டனம் தெரிவித்துள்ளார். கங்கனா பேசியது தனிப்பட்ட கருத்து என்றும், வருங்காலத்தில் அவர் இது போன்று பேசவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
BJP
,
Kangana Ranaut