நாட்டையே உலுக்கிய மற்றொரு பாலியல் சம்பவம்.. அதிர்ச்சி பின்னணி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

Maharashtra | நாட்டையே உலுக்கிய மற்றொரு பாலியல் சம்பவம்.. நர்சரி குழந்தைகளுக்கு டார்ச்சர்Maharashtra | நாட்டையே உலுக்கிய மற்றொரு பாலியல் சம்பவம்.. நர்சரி குழந்தைகளுக்கு டார்ச்சர்

மஹாராஷ்ட்ரா மாநிலம் தானேயில் நர்சரி பள்ளி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளியை சூறையாடிய பொதுமக்கள், ரயில் நிலையத்தில் போராட்டத்தில் குதித்தனர். கண்ணீர்புகைக்குண்டுகள் வீசி போராட்டத்தை கலைத்த போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் தானே அடுத்த பத்லாபூரில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 4 வயது குழந்தைகள் இரண்டு பேர் யூகேஜி படித்து வந்தனர். இவர்களை அங்கு பணியாற்றும் ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர் கழிப்பறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

விளம்பரம்

பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்ல பயந்தனர். அவர்களிடம் பெற்றோர் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. இது குறித்து போலீஸில் புகார் அளிக்க சென்ற போது அவர்கள் வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: என்ன நடக்கிறது கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கில்?

பள்ளி நிர்வாகத்தில் இதுகுறித்து பெற்றோர் முறையிட்ட போது அவர்களும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் உள்ளிட்டோர் போராட்டத்தில் இறங்கினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் தெரியவந்ததையடுத்து, போலீசார் அவசர அவசரமாக 17ம் தேதி குற்றவாளியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர், குழந்தைகளின் வகுப்பு ஆசிரியை, பெண் உதவியாளர் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து 19ம் தேதி மாலை மாலை பள்ளி நிர்வாகம் அறிவித்தது

விளம்பரம்

காலதாமதமாக நடவடிக்கை எடுத்ததற்காக பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இதனிடையே வழக்கு பதியாமல் அலைக்கழித்த காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பெற்றோர் பத்லாப்பூர் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களோடு ஆட்டோ ஓட்டுநர்கள், உள்ளூர் கடைக்காரர்கள் உள்ளிட்டோர் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின் போது பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க:
சடலத்தை எரித்து 3 மணி நேரம் ஆன பின்னர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது ஏன்? கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

விளம்பரம்

அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடைபயணமாக பத்லாப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு ரயில் தண்டவாளத்தில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். பொதுமக்கள் திரண்டு வந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனால் நீண்ட தூர ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

போராட்டத்தை கைவிடுமாறும், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என போலீசார் உறுதியளித்தும் அவர்கள் கலைந்து போகவில்லை. ஒரு கட்டத்தில் அத்துமீறிய பொதுமக்கள் கற்களை வீசி போலீசார் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

விளம்பரம்

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் நடவடிக்கையில் இறங்கினர். அதன்பின் ரயில் சேவை சீரடைந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், மஹாராஷ்ட்ராவில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Maharashtra
,
Railway Station
,
school
,
sexual harassment
,
sexually harrassed

You may also like

© RajTamil Network – 2024