நாட்டை விட்டு தப்பியோடிய பிரதமர் ஹசீனா.. அடுத்து எங்கு செல்வார்? மகன் சஜீப் பரபரப்பு பேட்டி!
ஷேக் ஹசீனா
வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஹசீனா, எங்கு தங்கப்போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என அவரின் மகன் சஜீப் வதேத் ஜாய் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியை மையமாக கொண்ட செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த சஜீப் வதேத் ஜாய், ஹசீனா யாருக்காக அதிகம் உழைத்தாரோ அவர்களே இப்படி தாக்குதல் நடத்துவார்கள் என்று நம்பமுடியவில்லை என்று தெரிவித்தார். அவமானப்படுத்தி ஹசீனாவை நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
விளம்பரம்
மேலும், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் ஹசீனா தஞ்சம் புக உள்ளதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு அவை வதந்திகள் என்று பதிலளித்தார். டெல்லியில் சிறிது காலம் தனது தங்கையுடன் ஹசீனா தங்க போவதாகவும், அதன் பிறகு எங்கே செல்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ஹசீனாவின் மகன் சஜீப் வதேத் ஜாய் விளக்கம் தந்தார். நாட்டை விட்டு வெளியேற ஹசீனா விரும்பவில்லை என்றும் தங்கள் கட்டாயத்தின் பேரிலேயே இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Bangladesh