Saturday, September 21, 2024

நியூசிலாந்து அபார பந்துவீச்சு.. பப்புவா நியூ கினியா 78 ரன்னில் ஆல் அவுட்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தரோபா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவுடன்(சி பிரிவு) மோதி வருகிறது.

மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்தது.

உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவம் இல்லாத பப்புவா நியூ கினியா அணி, வலுவானை நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க திணறியது. நியூசிலாந்தில் அபார பந்துவீச்சால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். ஒருவர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை.

இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024