Saturday, September 21, 2024

நியூசிலாந்து மிரட்டல் பந்துவீச்சு…உகாண்டாவை 40 ரன்களில் சுருட்டி அசத்தல்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக கென்னத் வைஸ்வா 11 ரன் எடுத்தார்.

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் டிரினிடாட்டில் இன்று நடைபெற்று வரும் 32வது லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட உகாண்டா – நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து உகாண்டா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோனக் படேல் மற்றும் சைமன் செசாசி ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரோனக் படேல் 2 ரன், சைமன் செசாசி 0 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய உகாண்டா வீரர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ராபின்சன் ஒபுயா 0 ரன், அல்பேஷ் ராம்ஜானி 0 ரன், கென்னத் வைஸ்வா 11 ரன், ரியாசத் அலி ஷா 2 ரன், தினேஷ் நக்ரானி 4 ரன், பிரெட் அச்செலம் 9 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் உகாண்டா அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 40 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக கென்னத் வைஸ்வா 11 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட், பவுல்ட், சாண்ட்னெர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 41 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024