Sunday, September 22, 2024

“நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன்”

by rajtamil
Published: Updated: 0 comment 19 views
A+A-
Reset

நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக ஒலிப்பேன் – ராகுல் காந்திராகுல் காந்தி

ராகுல் காந்தி

நீட் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வில் நடந்த மோசடி 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களுடன் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர் என்றும் பலர் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி, தேர்வுத் தாள் கசிவு சாத்தியம் இல்லை என அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

கல்வி மாஃபியாக்கள் அரசு அமைப்புகளுடன் இணைந்து தேர்வு வினாத்தாள்களை கசிய விடுவதை தடுக்க சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்ததை ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க:
“தீவிர அரசியலில் இருந்து நான் விலகுகிறேன்..” – வி.கே.பாண்டியன் உருக்கமான வீடியோ பதிவு

நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்புவேன் என்றும் ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election Results 2024
,
Rahul Gandhi

You may also like

© RajTamil Network – 2024