நெல்லை, தென்காசியில் நில அதிர்வு?

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

நெல்லை, தென்காசியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை அருகே அம்பாசமுத்திரம், ஜமீன்சிங்கம்பட்டி, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தென்காசியில், கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, பாப்பான்குளம், கல்யாணிபுரம், உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2 நிமிடங்கள் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். இந்த நில அதிர்வால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்படவில்லை. நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை களஅலுவலர்கள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நில அதிர்வுக்கு நிலநடுக்கத்திற்கான மையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024