Monday, September 23, 2024

பராமரிப்பு பணி: கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் சேவையில் மாற்றம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

சென்னை,

சென்னை கடற்கரை -விழுப்புரம் வழித்தடத்தில் கடற்கரை – எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) இரவு 10.40 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையில் (5 மணி நேரம் 50 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பகுதி நேர ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடற்கரையிலிருந்து இன்று மற்றும் நாளை இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து 10,11-ம் தேதிகளில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், இதே தேதிகளில் காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், இதே தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவள்ளூரில் இருந்து 10,11-ம் தேதிகளில் இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டியிலிருந்து இதே தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து 10,11-ம் தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து 10,11-ம் தேதிகளில் காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

செங்கல்பட்டிலிருந்து 10,11-ம் தேதிகளில் இரவு 9.10, 10.10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

திருமால்பூரில் இருந்து இதே தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் நிறுத்தப்படும்.

கூடுவாஞ்சேரியிலிருந்து இதே தேதிகளில் இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024