Wednesday, September 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 25.09.2024

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset
சதீஷ் தவான்

திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம் :நட்பு ஆராய்தல்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.
பொருள்: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.
பழமொழி :

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

A person never loses his/her nature no matter how hard-pressed.

இரண்டொழுக்க பண்புகள் :

* தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும். எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

"நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை "—–ஒரிசன் ஸ்வெட் மார்டென்.

பொது அறிவு :

1. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?

லூயி பாஸ்டியர்
2. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்

English words & meanings :

awful-மோசமான,
biting-கடித்தல்

வேளாண்மையும் வாழ்வும் :

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை.

செப்டம்பர் 25

சதீஷ் தவான் அஙர்களின் பிறந்த நாள்

சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

நீதிக்கதை

நாக்கு

பேரரசன் ஒருவரிடம் வலிமைமிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும் வாட்கள் கொண்ட கவசங்களால் மூடப்பட்டிருக்கும்.

அதன் வாலிலும் இரும்பு கொண்டு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். போர்க்களத்தில் அம்பு படாமல் இருக்க தனது தும்பிக்கையை வெளியே நீட்டாமல் நன்றாக உள்ளே சுற்றி வைத்துக் கொள்வதற்கு பழகி இருப்பார் பாகன்.

ஒரு நாள் போர்க்களத்தில் எதிரிப்படைக்கு பேரழிவை தந்து கொண்டிருந்தபோது,அதனுடைய உடலில் பொருத்தப்பட்டுள்ள ஆயுதம் ஒன்று கீழே விழுந்தது. அதை எடுக்க தனது தும்பிக்கையை நீட்டியது யானை. அதைக் கண்ட பாகன் எதிரிகளின் ஈட்டி தும்பிக்கையில் படாமல் இருக்க யானையை விரைவாக போர்க்களத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்தார்.

அரண்மனையில் அரசரை சந்தித்த பாகன், "அரசே இன்று போர்க்களத்தில் தான் சுருட்டி வைத்திருந்த தும்பிக்கையை வெளியே நீட்டி விட்டது யானை. எனவே, இனி போருக்கு பயன்படாது" என்று கூறினார்.

தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் வரை தான் யானைக்கு வலிமை மற்றும் பாதுகாப்பு.அதுபோல மனிதர்கள் தங்களுடைய நாவை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் அவர்களின் சொல்லுக்கு மதிப்பு.

கோபத்திலும், வெறுப்பிலும் ஏன் சந்தோஷத்திலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேச வேண்டும்.தேவையில்லாத இடங்களில் தும்பிக்கையை யானை சுருட்டி வைத்துக் கொள்வது போல, தேவையில்லாத இடங்களில் நாமும் நாவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

25.09.2024
* தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முழுமையாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
* எஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் நிறுவன நாளை முன்னிட்டு பொதுமக்கள் அதன் ஆய்வகங்களை இலவசமாக நேரில் பார்வையிடலாம் என அதன் இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
* மன அழுத்த மேலாண்மை பற்றி சொல்லித் தர வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
* கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 60 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
* இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்கின்றனர், இது உலகிலேயே அதிகம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
* ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன் அனுப்ப எலான் மஸ்க் திட்டம்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்திய மோகன் பகான் அணி.
* மகளிர் டி20 தொடர்: நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா.
Today’s Headlines
* In all 38 districts of Tamil Nadu, the IAS officers appointed as Vigilance Officers have been completely transferred and new ones have been appointed.
* As the Nipah virus has been detected in Kerala, the health department is conducting intensive surveillance at the checkpoints along the Kerala border in Coimbatore, Tirupur and Nilgiri districts.
* On the occasion of the foundation day of SIR – Structural Engineering Research Centre, the director has invited the public to visit its laboratories for free.
* Union Minister Nirmala Sitharaman has urged educational institutions to teach about stress management.
* The central government has announced that 60 new medical colleges have been set up across the country in the last one year.
* Indian young female workers work an average of 55 hours per week, the highest in the world, according to an International Labor Organization report.
* Elon Musk plans to send an unmanned rover to Mars with SpaceX.
* ISL Football Series; Mohan Baghan’s team beat Northeast United.
*Women’s T20 series: Australia whitewash New Zealand.
Prepared by
Covai women ICT_போதிமரம்

Special Thanks to & Import from https://covaiwomenict.blogspot.com/

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024