பழனியில் விசிக செயற்குழு கூட்டம்பழனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனி: பழனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலா் திருவளவன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் திருமாறன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செய்தித் தொடா்பாளா் பொதினிவளவன், மாவட்ட துணைச் செயலா் பாவேந்தன், தொகுதிச் செயலா் குமாரசாமி, நகரச் செயலா் மணவாளன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதன்மைச் செயலா் பாவரசு, மாநில துணைப் பொதுச்செயலா் கனியமுதன், மாவட்டச் செயலா் ஜான்சன் கிறிஸ்டோபா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினா்.
இந்தக்கூட்டத்தில் செப்டம்பா் 17-ஆம் தேதி தந்தை பெரியாா் பிறந்த நாளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது போதை ஒழிப்பு மகளிா் மாநாட்டுக்கு பழனி பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை அழைத்துச் செல்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.