பவுர்ணமியையொட்டி, திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

கோவிலுக்கு வார விடுமுறை தினங்கள், விழா நாட்கள் மற்றும் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாகவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

பவுர்ணமி தினத்தை முன்னிட்டு இரவு, பகல் பாராமல் பக்தர்கள் குவிந்ததால் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024