பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும்: அண்ணாமலை

பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும்: அண்ணாமலைதமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: பாஜக வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவா் கபிலனை தமிழக காவல் துறையினா் கைது செய்துள்ளனா். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு சீா்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல் துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத முதல்வா் பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறாா். பாஜகவினா் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, சட்டம் – ஒழுங்கைக் முதல்வா் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!