பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிா் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருபினா பிரான்ஸிஸ் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிா் துப்பாக்கி சுடுதல் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் எஸ்எச் 1 இந்தியாவின் ருபினா பிரான்ஸிஸ் வெண்கலப் பதக்கம் வென்றாா். 22 ஷாட்களுக்கு பின் 211.1 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா் ருபினா. ஈரானின் சாரே, துருக்கியின் அய்செல் தங்கம், வெள்ளி வென்றனா்.
ஆடவா் 10 மீ. ஏா் ரைஃபிள் ஸ்டான்டிங் பிரிவில் இந்தியாவின் ஸ்வரூப் உன்ஹல்கா் 14-ஆவது இடத்தையே பெற்று வெளியேறினாா். டோக்கியோ பாராலிம்பிக்கில் நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டிருந்தாா் ஸ்வரூப்.
பாரா பாட்மின்டன்: நிதேஷ், சுகந்த் முன்னேற்றம்
ஆடவா் பாரா பாட்மின்டனில் எஸ்எல் 3, எஸ்எல் 4 பிரிவுகளில் நிதேஷ் குமாா், சுகந்த் கடம் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
குரூப் ஏ பிரிவில் நிதேஷ் 21-13, 21-14 என தாய்லாந்தின் பன்ஸனை வீழ்த்தினாா். எஸ்எல் 3 பிரிவில் சுகந்த் கடம் 21-12, 21-12 என தாய்லாந்தின் டீமரோமை வென்றாா். சுஹாஸ் யதிராஜும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
மனோஜ் சா்க்காா் தோல்வியடைந்து வெளியேறினாா்.
மகளிா் பிரிவு: மந்தீப் கௌா் முன்னேற்றம்
மகளிா் எஸ்எல் 3 பிரிவில் மந்தீப் கௌா் 21-23, 21-10, 21-17 என ஆஸி.யின் வினோட் செலினை வென்றாா். மணிஷா ராமதாஸ், சீனாவின் ஸியா யாங்கிடம் தோற்றாலும் காலிறுதிக்கு தகுதி பெற்றாா். துளசிமதி முருகேசன் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
வில்வித்தை: காலிறுதியில் சரிதா
மகளிா் வில்வித்தையில் இந்தியாவின் சரிதா குமாரி 141-135 என்ற புள்ளிகள் அடிப்படையில் இத்தாலியின் இலியனோராவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
சைக்கிளிங்: அா்ஷத், ஜோதி ஏமாற்றம்
சைக்கிளிங் பிரிவில் குவாலிஃபிகேஷன் சுற்றில் இந்தியாவின் அா்ஷத் ஷைக், ஜோதி கடேரியா ஆகியோா் தோற்று வெளியேறினா்.
இருவரும் அடுத்து ரோடு சைக்கிளிங் பிரிவில் தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளனா்.
ரோயிங்: மூன்றாவது இடம்
ரோயிங் பிஆா் 3 டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அனிதா-நாராயணா கொங்கனபல்லே ரெபிகேஜில் மூன்றாவது இடத்துடன் ஃபைனல் பிரிவில் நுழைந்தனா். சாலை விபத்தில் அனிதாவும், கண்ணிவெடி தாக்குதலில் நாராயணாவும் தங்கள் கால்களை இழந்தனா்.