பாராலிம்பிக் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதில் ஈரானின் சரே ஜவன்மர்டி தங்கப் பதக்கத்தையும், துருக்கியின் அய்சல் ஓஸ்கான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இத்துடன் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் மொத்தம் 4 பதக்கங்கள் அடங்கும்.

பாரீஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 19 இடத்திலும் உள்ளன.

You may also like

© RajTamil Network – 2024