Saturday, September 21, 2024

பாரீஸ் ஒலிம்பிக்; இந்திய ஆக்கி வீரருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷீட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் எப்.ஐ.எச் நடத்தை விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் விளையாட மாட்டார்.

You may also like

© RajTamil Network – 2024