Saturday, September 21, 2024

பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா தனது அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் வீசினார். ஆனால் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வியப்பூட்டும் வகையில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அதனை நீரஜ் சோப்ராவால் முந்த முடியவில்லை. முடிவில் 90 மீட்டர் தூரத்துக்கு மேல் வீசிய ஒரே வீரரான அர்ஷத் நதீம் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நீரஜ் சோப்ராவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

You may also like

© RajTamil Network – 2024