Sunday, September 22, 2024

பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

ஈரோடு-திருப்பூா் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) நாளை மற்றும் வரும் 30-ந்தேதி ஈரோடு ரெயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். திருச்சியிலிருந்து ஈரோடு வரை மட்டுமே ரெயில் இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் மாலை 5 மணிக்குப் பிறகு ஈரோட்டில் இருந்து இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயிலின் நிறுத்தங்களையே கொண்டிருக்கும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி ஜி.மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024