பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் – தமிழிசை சவுந்தரராஜன்

by rajtamil
0 comment 47 views
A+A-
Reset

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற்றும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர்மாவட்டம், காட்பாடி ரெயில் நிலையத்தில் தெலுங்கானாவின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும்

பாரத தேச மக்கள் வளர்ச்சிக்காகவும், ஊழலுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களிக்கிறோம் என மக்கள் மகிழ்ச்சியாக சொல்கின்றனர்.மக்கள் நாட்டின் பாதுகாப்பை உணர்ந்தே பா.ஜ.க.வுக்கு வாக்களித்துள்ளனர். பிரதமர் மீது, மக்கள் அபரிவிதமான அன்பை வைத்திருகின்றனர்.

கன்னியாகுமரிக்கு மோடி தியானம் செய்ய வந்தார். ஆனால் மு.க .ஸ்டாலின் கொடைக்கானாலில் கோல்ப் விளையாடினார். பிரதமர் செல்லும் போது தியானம் செய்த இடம் குறித்து மக்களுக்கு அதற்கான முக்கியத்துவம் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024