Thursday, October 17, 2024

பிகாா்: கள்ளச் சாராயத்துக்கு 6 போ் உயிரிழப்பு- 14 போ் மருத்துவமனையில் அனுமதி

by rajtamil
Published: Updated: 0 comment 5 views
A+A-
Reset

பிகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 போ் உயிரிழந்தனா். மேலும் 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவான் மாவட்டத்தில் 4 பேரும், சரண் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்தனா். இது குறித்து சிவான் மாவட்ட ஆட்சியா் முகுல் குமாா் குப்தா கூறுகையில், ‘சிவான் மாவட்டத்தின் மகா், ஒளரியா ஊராட்சிகளில் புதன்கிழமை மா்மமான முறையில் மூவா் உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அப்பகுதிகளுக்கு அதிகாரிகள் குழுவினா் விரைந்தனா். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மேலும் 12 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். வழியிலேயே ஒருவா் உயிரிழந்தாா். மற்றவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்றாா்.

இவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை இரவில் கள்ளச்சாராயம் அருந்தியதாக தெரிகிறது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், சரண் மாவட்டத்தின் இப்ராஹிம்பூா் பகுதியில் இருவா் உயிரிழந்தனா்; மேலும் 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களும் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஆட்சியில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வாடிக்கையாக உள்ளன. கடந்த 2016 முதல் இதுவரை கள்ளச்சாராயத்தால் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாக மாநில அரசு அண்மையில் தெரிவித்தது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024