Saturday, September 21, 2024

‘பிரச்சினை முடிந்துவிட்டது..’ – நடிகர் விஜய் ஆண்டனி பதிவு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

சென்னை,

'கோலி சோடா', 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் விஜய் மில்டன். இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த 2-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன், படத்தின் தொடக்கத்தில் வரும் ஒரு நிமிட காட்சி ஒன்றை தான் வைக்கவில்லை என்றும் அது எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றும் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், இப்படத்தின் நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,'மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை.. இது சலீம் 2 இல்லை.., ' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது மற்றொரு எக்ஸ் வலைதள பதிவில், "மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ஓர் அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கலந்து பேசி அதை இன்று முதல் திரையரங்குகளில் நீக்கி விடுவதென முடிவு எடுத்து விட்டனர். இந்த பிரச்சினை முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024