Saturday, September 21, 2024

பிரதமர் திறந்த சத்ரபதி சிவாஜி சிலை: ஓராண்டுக்குள் இடிந்ததால் பரபரப்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்புபிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படை தினத்தை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.

விளம்பரம்

Also Read:
உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு

இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) பிற்பகல் 1 மணியளவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து விழுந்தது. இதற்கு பலத்த காற்றே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது பல சர்ச்சைகளை கிளம்பி உள்ளது.

விளம்பரம்

சத்ரபதி சிவாஜி சிலையை முறையாக பராமரிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Maharashtra

You may also like

© RajTamil Network – 2024