Monday, September 23, 2024

பிரதமர் மோடியின் படுதோல்வி, மணிப்பூர் மன்னிக்காது: மல்லிகார்ஜுன கார்கே

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

புது தில்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், முதல்வர் பிரென் சிங்கை உடனடியாக தகுதிநீக்கம் செய்துவிட்டு, மத்திய அரசு, மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அவசர நிலைக்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

மணிப்பூர் வன்முறை குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு அமைக்கப்பட்ட மணிப்பூர் விசாரணை ஆணையம் அதன் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் படுதோல்வி இது என்றும், மணிப்பூர் எப்போதுமே மன்னிக்காது என்றும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024