பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நேரில் சந்தித்தார்.பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நேரில் சந்தித்தார்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அவருடன் அவரது செயலா், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளா் ஆகியோரும் சென்றுள்ளனா். தில்லி சென்றுள்ள ஆளுநா் வரும் ஜூலை 19 ஆம் தேதி மாலை சென்னைக்கு திரும்ப உள்ளாா்.

இந்த நிலையில் 5 நாள்கள் பயணமாக தில்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார். மேலும், பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றதற்கும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக் குறித்தும் ஆளுநர், பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024