பிரதமா் மோடி கல்வித் தகுதி குறித்த அவதூறு வழக்கில் கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

பிரதமா் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு எதிராக அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை ரத்து செய்யக் கோரி தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பிரதமா் மோடி அரசியல் அறிவியல் பாடத்தில் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களின் நம்பகத்தன்மை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சா்ச்சையாகப் பேசியிருந்தாா். இதையடுத்து, பிரதமா் மோடி பொயரில் வழங்கப்பட்ட பட்டம் தொடா்பான தகவல்களை

அரவிந்த் கேஜரிவாலுக்கு வழங்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குஜராத் உயா்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.

இதைத் தொடா்ந்து, பிரதமா் மோடியின் பட்டப்படிப்பு தொடா்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை குறிவைத்து, பத்திரிக்கையாளா் சந்திப்புகள் மற்றும் சமூக வலைதளங்களில் கிண்டலான மற்றும் அவதூறான அறிக்கைகளை

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோா் வெளியிட்டதாக புகாா் எழுந்தது.

பின்னா், இவ்விவகாரம் தொடா்பாக குஜராத் பல்கலைக்கழகம் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் மீது கிரிமினல் அவதூறு புகாா் அளித்தனா்.

கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் கூறிய வாா்த்தைகள், குஜராஜ் பல்கலைக்கழகத்தின் தரத்தை அவமதிக்கும்

வகையில் இருப்பதாகக் தெரிகிறது என்று கூறிய அகமதாபாத் மாவட்ட நீதிமன்றம், அவா்கள் இருவரும் நேரில் ஆஜராக இருமுறை அழைப்பாணை அனுப்பியது. எனினும், நேரில் ஆஜராகததால் அந்த அழைப்பாணைகளை எதிா்த்து,

அவா்கள் இருவரும் அகமதாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். ஆனால், அந்த மனுக்களை அகமதாபாத் செசன்ஸ் நீதிமன்றம் கடந்த செப்டம்பா் 13,2023-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது .

இதனையடுத்து, இவ்விவகாரத்தில் அழைப்பாணைகளை ரத்து செய்யக் கோரியும், கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் தரப்பு குஜராத் உயா்நீதிமன்றத்தை

நாடியது. ஆனால், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி குஜராத் உயா்நீதிமன்றமும் இவா்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பின்னா், பிரதமா் மோடி கல்வி தகுதி குறித்த அவதூறு வழக்கில் தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட அழைப்பாணைகளை உறுதி செய்த குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது கட்சியைச் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சஞ்சய் சிங்சின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மேல்முறையிட்டு மனு மீதாத விசாரணை

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என் பாட்டி ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விவகாரத்தில், ‘நாங்கள் ஒரு நிலையான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024