Saturday, October 19, 2024

பிரியாணியில் உள்ள இறைச்சி கெட்டுப்போனதாக கூறியதால் ஓட்டலில் சாப்பிட வந்தவர்களுக்கு அடி-உதை4 பேர் கைது

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

பிரியாணியில் இருந்த இறைச்சி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

புளியந்தோப்பு,

சென்னை வியாசர்பாடி ஜெ.ஜெ.ஆர். நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 29). ஐகோர்ட்டில் வக்கீலாக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று முன்தினம் புளியந்தோப்பில் உள்ள ஒரு கடையில் தனது நண்பர்கள் 13 பேருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தார். பிரியாணியில் இருந்த இறைச்சி கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டதால் ஓட்டல் ஊழியர்களுக்கும், பிரேம்குமாருடன் வந்த நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஓட்டல் ஊழியர்கள் மேலும் சிலரை அங்கு வரவழைத்தனர். அங்கு வந்த அவர்கள், பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து புளியந்தோப்பைச் சேர்ந்த ரபிக் ஷெரிப் (23), பரத் (27), மொய்னுதீன் (30), பாபு பாஷா (31) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024