புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக். 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதையும் படிக்க: கனமழை: வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பிவைப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில், அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக். 14) விடுமுறையை புதுவை அரசு அறிவித்துள்ளது

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024