பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமார் ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் என பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிகாரின் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். பின்னர் அன்றைய தினம் காலைமுதலே படிப்படியாக பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனா். சிலா் கண் பாா்வையையும் இழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி கள்ளச்சாரயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வா் நிதீஷ் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதனிடையே பைகுந்த்பூரில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் மேலும் 2 பேர் சனிக்கிழமை பலியாகியுள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. பிகாரில் கடந்த 8 ஆண்டுகளாக முழு மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடா் நிகழ்வாக உள்ளன. கடந்த 2016 முதல் இதுவரை கள்ளச்சாராயத்தால் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாக மாநில அரசு அண்மையில் தெரிவித்தது. இதனால் ராஷ்டிரிய ஜனதா தள உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கேள்வி எழுப்பி வருகின்றன.
உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளைப் போல் செயல்பட முடியாது! -தலைமை நீதிபதி
இந்த நிலையில் பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமார் ஆட்சியின் மிகப்பெரிய ஊழல் என பிகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பூரண மதுவிலக்குதான் நிதீஷ்குமார் ஆட்சியின் மிகப்பெரிய ஊழல். சுமார் 30,000 கோடி மதிப்பிலான கள்ளச்சாராய தொடர்பான பொருளாதாரம் பிகாரில் இயங்கி வருகிறது. நிதீஷின் ஜேடியு கட்யினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர்.
தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பிகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி, "மாநிலத்தில் பூரண மதுவிலக்கு இருந்தபோதிலும், மகாராஷ்டிரத்தை விட பிகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.