Monday, October 7, 2024

பைக் மீது மோதி பேருந்து தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழப்பு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தேனி அருகே போடேந்திபுரம் விலக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்து நாசமானது.

தேனி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் அரசாங்கம் (52). இவா் தேனி சமதா்மபுரத்தில் தொலைக்காட்சி பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வந்தாா். தேனியிலிருந்து கூழையனூா் அருகே அய்யநாதபுரத்தில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு அரசாங்கம் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

இதன் பின்னா், தோப்பிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது, தேனி புறவழிச்சாலை – போடேந்திரபுரம் விலக்குப் பகுதியில் வந்த போது, தேனியிலிருந்து கம்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில் தீப்பற்றி எரிந்து உருக்குலைந்த தனியாா் பேருந்து.

இதில் இரு சக்கர வாகனம் பேருந்தில் சிக்கி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு, பேருந்தில் தீப்பற்றியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த அரசாங்கம் தீயில் கருகி உயிரிழந்தாா். பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி பேருந்திலிருந்து இறங்கினா். சிறிது நேரத்தில் பேருந்து முழுமையாக தீப்பற்றி எரிந்து நாசமானது.

இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநா் பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (32) மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024