Sunday, September 29, 2024

பொங்கலூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

பொங்கலூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வுரூ.5.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பல்லடம், ஆக. 1: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ.5.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொங்கலூா் ஊராட்சியில் ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம், காட்டுப்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகள், மாதப்பூா் ஊராட்சியில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் நபாா்டு வங்கி நிதியின்கீழ் அமைக்கப்படும் கிராமப்புறச் சாலைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ் உகாயனூா், திருப்பூா் சாலை முதல் சிக்கனுாா் சாலை வரை சாலை மேம்படுத்தும் பணிகள், பொங்கலுாா் ஊராட்சி, காளிமேட்டுப்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.2.22 லட்சம் மதிப்பீட்டில் விவசாய ஏரியை பலப்படுத்தும் பணி, ஐயப்பா நகா் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.10.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கு, காட்டுப்பாளையம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகள் என மொத்தம் ரூ.5.18 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

பணிகளின் நிலவரம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்ததுடன் அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, பொங்கலுாா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் குமாா், பொங்கலுாா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயகுமாா், செல்டன், உதவிப் பொறியாளா் இளங்கோ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024